சிறிலங்கா ஒரு பன்முக சமுதாய நாடு ஐ.நா அதிகாரிகள் தகவல்

சிறீலங்காவில் சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா அதிகாரிகளான  சிறப்பு அலோசகர் அடாமா டயேன் மற்றும் ஐ.நா விசேட ஆலோசகரான கரோன் ஸ்மித் ஆகியோர் கூட்டாக விடுத்த தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட சிறுபான்மை முஸ்லிம், பெரும்பான்மை சிங்களவர்களுக்கிடையிலான மோதலில் கடந்த திங்கள் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

அண்மைக்கால வன்முறை ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்கள் வளர்ந்து வருவதை காட்டியுள்ளது. சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர் சிறிலங்கன் ஒவ்வொருவரும் தமது சமூகங்களை சுதந்திரமாக அடையாளப்படுத்த வேண்டும் என சிறப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். என்றும் அவர்கள் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வன்முறை அதிகரிக்காதிருப்பதற்காக அரசாங்கம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்ப்படுத்தியுள்ளதுமக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.