உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு – வற்றாப்பளை அம்மன் உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கெரிப்பதற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று (13) மாலை 6.00 மணியளவில்  நடைபெற்றது.

காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுக்கப் புறப்பட்ட மாலை 6.00 மணியளவில் கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணியளவில் காட்டா விநாயகர் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கேற்றப்பட்டது.

இந்த விளக்கு எதிர்வரும் திங்கட் கிழமை அன்று வற்றாப்பளைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டு, பொங்கல் வழிபாடுகள் நடத்தப்படும்.