சிறிலங்காவில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் மரணதண்டனை நடவடிக்கை

பல ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளியே தெரிந்தால், மைத்திரபால சிறிசேன கடுமையானவர் என்று தெரியவரும் என்பதால், இத்தண்டனை முறை இரகசியமாக பேணப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் ஜனாதிபதி பற்றிய அவதூறான கருத்துக்கள் நிலவும் என்பதால், இவ்வாறு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் இந்த தண்டனை முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான சட்டச் சிக்கல்களை சட்டமா அதிபர் திணைக்களம் கவனத்தில் கொண்டு செயற்படும். மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதை இரு அமைச்சர்கள் உறுதி செய்துள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் குறித்து தெரிவயந்தால், எழும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே இரகசியமாக முன்னெடுக்க விரும்புவதாக மைத்திரிபால சிறிசேன தனது நெருக்கமானவர்களுக்கு தெரிவித்துள்ளார்