சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக சிறிலங்கா சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.

சீனா, ஜேர்மனி, சவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளே தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ள நாடுகளாகும்.

சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தூதர்களை அழைத்து, நாட்டு நிலைமை தொடர்பாக விளக்கமளித்ததுடன், பயண தடைகளை நீக்கும்படி கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.