சிரியாவில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

சிரியாவின் அவரின் நகரில் இன்று (29) ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் 11 சிறுவர்கள் உட்பட 40 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் உள்ள இடத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது என துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் வாகனம் ஒன்றிலேயே குண்டு வெடித்துள்ளது. இதற்கு குர்திஸ் வைபிஜி ஆயுதக்குழுவே காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்காவின் வெளியுறவுத் திணைக்களம், போர் நிறுத்தத்தை எல்லா தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுள்ளது.