சாணக்கியனை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரியுங்கள் – செஹான் சபையில் தெரிவிப்பு

2021ஆம் ஆண்டில் அரச தரப்பினர் மீண்டுமொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கூறிய கருத்து மிகவும் பாரதூரமானதெனவும், அவரை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்தவேண்டுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதேஅவர் இவ்வாறு கூறினார்.