சர்வமத தலைவர்களிடம் ஆசி பெற்ற வடமாகாண ஆளுநர்

அண்மையில் புதிதாக பதவியேற்ற வடமாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் அவர்கள் நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌலவி ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் போது வடமாகாணத்தில் தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளை சர்வமத தலைவர்களுக்கு எடுத்துரைத்த ஆளுநர், வட மாகாணத்தின் நிலைமை குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆசி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.