சரிநிகர் சமமாய் தமிழீழ தேசியக்கொடி

இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும் ,பலநாட்டு கொடிகளுடன் ஏற்றி பறக்கவிடப்பட்டது.தமிழீழ தேசியக் கொடியானது வானுயர கம்பீரத்துடன் பறந்த காட்சியானது தமிழர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

சிங்கள இனவாத கொடிக்கு நிகராக எமது தமிழீழ தேசியக்கொடி இன்று “இத்தாலி ஜெனோவா”,மாநகரில் கம்பீரத்துடன் பறந்தமையானது உலகம் காலம் கடந்து எமது தமிழ் இனத்தைப் புரிந்து புரிந்துகொள்ள முற்படுத்திவதை உணர்த்தும் ஒரு செயற்பாடாக நோக்கப் படுகிறது.