சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் உட்பட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆகியோருடன் நால்வரை ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திவி நெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர். ஏ. ஏ. ரணவக்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் நியூடயமண்ட் கப்பல் செய்த முறைப்பாடு செய்தார். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை இடம் பெற்றது.

இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ண, சட்டத்தரணி வெலிஅமுன ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.