சம்பந்தனின் பேச்சை நம்பாதீர்கள் – வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சிங்களவர்களுக்கு உதவியவர் இரா.சம்பந்தன். அவரின் வாய்ப் பேச்சிற்கு ஏமாறாமல் தமிழ் வேட்பாளருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம்(10) வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் நடத்தப்பட்டது. இதன்போது அவர்கள் தங்கள் அலுவலகம் முன்பாக ஒரு போராட்டத்தையும் நடத்தினர்.  இந்த போராட்டத்தின் போதே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்திருந்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்து இரா.சம்பந்தன்  தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.