சமகால அரசியல், சமூக, பொருளாதார நிலை குறித்த கலந்துரையாடல்

55 சமகால அரசியல், சமூக, பொருளாதார நிலை குறித்த கலந்துரையாடல்‘வல்லமை’ – சமூக மாற்றத்திற்கான போடராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால சமூக அரசியல் பொருளாதார சூழலை விளக்கி கொள்ளுதல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் தொடர் நேற்றுக் காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சட்டத்தரணி சுவஸ் திகா, சட்டத்தரணி இளங்கோவன், பவ்ரல் அமைப்பு – மாவட்ட இணைப்பாளர் சசிகாந்த் மற்றும் மற்றும் ‘வல்லமை’ அமைப்புப்  பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

56 சமகால அரசியல், சமூக, பொருளாதார நிலை குறித்த கலந்துரையாடல்சட்டத்தரணி சுவஸ்திகா தனது உரையில் தற்கால பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்தார். தற்கால அரசியல், சமகால போக்கு ஆகியன பற்றியும் கலந்துரையாடினார்.

இதேவேளை சமூக ஆர்வலர்கள் சட்டத்தரணி சுவஸ்திகாவிடம் தற்காலப் பிரச்சினைகளில் அதிகளவாக போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதேவேளை ‘மார்ச் 12 இயக்கம்’ தொடர்பான கருத்துக்களும் பகிரப்பட்டன.