சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்க சந்திரிகா முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக தெரியவருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகின்றது.

இவர்கள் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பது தொடர்பாக அவருக்கு நெருக்கமான இரண்டு முக்கியஸ்தர்களுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியில் உள்ள அவருக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவான நடவடிக்கைகளை சந்திரிகா முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.