கோவிட்-19 – நோயாளர் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் நோயளர்களின் எண்ணிக்கை 653 ஆக இன்று (30) அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 507 பேர் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. அதனை இயக்கும் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துதல், விநியோகங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.