கோவிட் – 19 இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனை எட்டியது

கொரோனோ வைரஸின் தொற்றுதலுக்கு இலக்காகி உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளதாக ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (17) தெரிவித்துள்ளது.

மிகவும் அதிகமான தொற்று விகிதத்தை உலகம் சந்திக்க ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் (16) தெரிவித்திருந்தது.

இந்தியா மிக அதிகமான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது. நேற்று சனிக்கிழமை (17) அங்கு 230,000 பேருக்கு தொற்று நோய் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் இதுவரை 140 மில்லியன் மக்கள் தொற்றுதலுக்கு உட்பட்டுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை அமெரிக்கா, பிரேசில், மெக்சிக்கோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிகமாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.