கோவிட்-19 இன் தாக்கத்திற்கு ஈழத்துக் கலைஞர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு இலக்காகிய பிரான்ஸ் நாட்டை வதிவ-pடமாகக் கொண்ட ஈழத்து நாடக மற்றும் ஈழ திரைப்பட கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் பிரான்ஸில் இன்று (22) மரணமடைந்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக புலம்பெயர் மக்கள் பலர் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளில் மரணமடைந்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.