கோத்தபயாவை சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் கோதபயா ராஜபக்ஸவை  அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

கோதபயாவை சந்திக்க சிறிலங்காவிலிருந்து பொதுஜன பெரமுனவைச் சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே, இந்திக அனுருதத, பிரியங்கார ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தனர். இவர்களைச் சந்தித்த கோதபயா சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தன்னை சந்தித்ததாக எடுத்துக் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவும் உடன் இருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரை செயற்பாடுகள் குறித்து கோதபயா ராஜபக்ஸவுடன் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துரையாடினர்.