உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (18) அழைக்கப்பட்டபோது, அது குறித்த மேலதிக விடயங்களைப் பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த மனு நேற்று (17) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது, வழக்கின் உண்மைகளைச் சரிபார்ப்பதற்காக இம்மனுவை இன்றைய தினம் மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.



