கொழும்பு கொண்டுவரப்பட்ட பிள்ளையான்; உயர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்று சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்புச் சிறையில் இருந்து கொழும்புக்கு நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்ரோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறையிலுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிள்ளையான் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.