கொழும்பில் எதிர்வரும் 11 ஆம் நாள் வரை தொடர் ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் தொடரவுள்ளது. ஏனைய மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமைவரை காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், புதன்கிழமை (06) இரவு 8 மணிமுதல் 11ஆம் திகதி காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமலிலில் இருக்குமென, சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.