கொழும்பில் இருந்து சட்டவிரேதமாக யாழ் வந்தவர்கள் தடுத்துவைப்பு

கொழும்பில் கொரோனா வைரஸ் அபாய வலையமாக அறிவிக்கப்பட்ட பகுதிக-ளில் இருந்து மிளகாய் ஏற்றிவரும் பாரவூதியில் யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரேதமாக வந்த 7 பேர் இன்று (22) தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களை ஏற்றிவந்த பாரவூர்தியை கண்டறியும் நடவடிக்யை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாரவூர்தியில் ஏற்றிவரப்பட்ட பொருட்களும் சோதனை செய்யப்பட வேண்டும் என யாழ் மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.