கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாவது உயிர் பலி.!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஐந்தாவது நபர் இவராவார். குறித்த நபர் அண்மையில் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.