கொரோனா வைரஸ்? சீனாவிலிருந்து கொழும்பு திரும்பிய மூவர் வைத்தியசாலையில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய்த் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மூவரும் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை அங்கொடை வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு அந்தத் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அந்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரே கண்டறியப் பட்டுள்ளதாகவும் அந்தச் சீனப் பெண்ணுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.