ஐந்து படையினருக்குப் பொது மன்னிப்பு: சிறிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாம்

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியால் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த ஐவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு அரசமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளாகவிருந்த மேலும் ஐந்து பேரை விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐவரும் பாதுகாப்புத் துறையை சேர்ந்தவர்கள் என்பதுடன், சிறிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்களாவர். இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆகும்” என்றுள்ளது.