கொரோனா நோயாளர் எண்ணிக்கை 751 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் இன்று (4) மேலும் 33 நோயளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் கோவிட்-19 நோயளர்களின் எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது.

நோயாளிகளில் 549 பேர் வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்று வரும்போதும், 194 பேர் குணமடைந்துள்ளனது.

இதனிடையே, ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் கொழும்பு, கம்பகா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் தமது பணிகளை எதிர்வரும் 11 ஆம் நாளில் இருந்து ஆரம்பிக்கலாம் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.