குஜாராத்தில் உள்ள i-Hub கம்பெனிக்கு ஜே.வி.பி. தலைவா்கள் விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இந்திய விஜயத்தின் நான்காவது நாளான இன்று அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில அரசாங்கத்தின் கல்வித் திணைக்களத்துடன் இணைந்த i-Hub கம்பெனிக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.

மேற்படி நிறுவனம் மாணவர்களுக்கும் பயிலுனர் தொழில் முனைவோருக்கும் மதியுரைசேவைகளையும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகின்ற மற்றும் முதலீட்டாளர்கள் ஊடாக நிதியங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற புத்துருவாக்க கேந்திர நிலையமாகவே (Innovation Hub) இடையீடு செய்கின்றது.

i-Hub நிறுவனம் மாணவர்கள், புத்திஜீவிகள், கைத்தொழில்கள் மற்றும் சந்தையை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தி அரச ஒழுங்குறுத்தலைக்கொண்ட வசதி வழங்குகின்ற முறைமையொன்றை அபிவிருத்தி செய்வதற்கான உபாயமார்க்க இடையீடுகளையும் செய்துவருகின்றது. மதியுரை, வலயமாக்கல், பாவனையாளர் உறவுகள், முதலீட்டு வாய்ப்புகள், உதவிப் பொறியமைப்புகள் மற்றும் ஆய்வுகூட உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதலுடன் தொடர்புடைய துரித நெகிழ்ச்சியான மற்றும் ஒத்துழைப்புச் சேவைகளின் ஒருங்கிணைப்பாக அமைகின்ற i-Hub, தனது சேவை பெறுனர்களுக்கு அவசியமான அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் பூர்த்திசெய்துகொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் பின்னர் அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்களையும் விசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களை (GAIC – Gujarat Agro Industries Corporation) பார்வையிடுதலிலும் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலையான (TATA Motors) ஐ பார்வையிடுதலிலும் சூரிய வலுச்சக்திக் கருத்திட்டங்களையும் அவதானித்தலிலும் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு இன்று இரவு கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் (முன்னர் Trivandrum என அழைக்கப்பட்டது) நோக்கிப் பயணிக்கவுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் நேற்று (07) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் அமைந்துள்ள அமூல் பாலுற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திச் செயற்பாங்கினை பார்வையிடுதலை உள்ளடக்கிய வெளிக்கள சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரை உள்ளிட்ட முகாமைத்துவம், தேசிய பால் உற்பத்திச் சபையின் தலைவர் உள்ளிட்ட பால் உற்பத்தித் துறையின் நிபணர்கள் குழுவுடன் பால் உற்பத்தியின் புத்தம்புதிய நிலைமைகள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

நிறுவனத்தின் சொத்துவமும் முகாமைத்துவமும் கூட்டுறவுக் கட்டமைப்பின்கீழ் இயங்கிவருகின்றது. பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் உற்பத்திகளின் விலைகளைக் குறைத்துக்கொள்ளல், உற்பத்தி வினைத்திறனை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் உச்ச அளவிலான பாவனை போன்ற விடயுங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அவர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் பற்றியும் தற்போது தோன்றியுள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பல்வேறு சிக்கலான நிலைமைகள் பற்றியும் இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முகாமைத்துவத்திடம் கேள்வியெழுப்பி உள்ளனர்.

அதேவேளையில் குஜராத்தின் அபிவிருத்தி மாதிரி பற்றிய சமர்ப்பண நிகழ்வின்போது குஜராத் அரசாங்கத்தின் வலுச்சக்தி மற்றும் கனிய உற்பத்தி திணைக்களத்தின் பிரதம செயலாளர் Mamta Verma, கைத்தொழில் மற்றும் அகழ்வுத் திணைக்களத்தின் மேலதிக பிரதம செயலாளர் S.J. Haider, காந்தி நகரத்தின் the Leela ஹோட்டலின் பொதுமுகாமையாளர் Vikas Sood ஆகியோர் கலந்துகொண்டனர். உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்முயற்சி வசதி, வலுச்சக்தித் துறை, வெளிநாட்டு வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.