கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயளர்களுக்கும் மாதாந்த மருந்து வகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுளமாறும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.