காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் நேற்றைய (03.09) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இக்கொடுப்பனவு வைப்பிலிடப்படும் என்று நிதி மற்றும் சமூக முன்னேற்ற அமைச்சர்களின் கூட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவுகளைக் கோருவதற்கான செயல்முறையை எளிதாக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்படும். காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின்படி இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கொடுப்பனவுத் திட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே கூட்டாக நிராகரித்திருந்தன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பதிலையே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.