கமலா ஹரிஸைவிட எனக்குத் தான் இந்தியர்களின் ஆதரவு அதிகம்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிஸைவிட தனக்கே இந்தியர்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்டரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், கமலா ஹரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், எனக்குத்தான் இந்தியர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஜோ பிடன் அதிபராக வந்தால், அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. கமலா ஹரிஸ் அவருடைய கட்சிக்கு பின்னடைவைத் தருவார். பிடனைவிட அவர் மோசமானவர். பொலிசாருக்கு எதிராக நடந்து கொள்ளுவார்.

அத்துடன் ஜோ பிடன் அமெரிக்க காவல்துறைக்கு நெருக்கடி தரும் சட்டங்களை இயற்றுவார். மேலும் துணை வேட்பாளராக பிடன்,  செனட்டர் எலிசபெத் வாரணை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார்.