கடற்படையினர் 498 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் நேற்றுக் காலை வரை இனங்காணப்பட்ட 925 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 498 பேர் சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் நேற்று முன் தினம் இரவு வரை இனங்காணப்பட்டனர் என்று நேற்றுக் காலை சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. இதையடுத்து, இலங்கையில் தொற்றுக் குள் ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 925 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தநிலையில், நேற்று முன் தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரும், வெலிசறைக் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை தொற்று உறுதி செய்யப் பட்ட 925 பேரில் 498 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.