கடனாவில் இருந்த வந்த தமிழர்கள் யாழ்பாணத்தில் கைது! காரணத்தை வெளியிட்ட பொலிஸ்!!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து, தற்போது கனடா பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களே யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் தங்கி நிற்பதற்கான விசா காலம் முடிவடைந்த போதும் அவர்கள் மீண்டும் கனடாவிற்கு செல்லாத காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.