கச்சதீவை தாரைவார்த்தமை மன்னிக்க முடியாத துரோகம் – பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ்

“கச்சதீவு தாரை வார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸூடன் தி.மு.க. உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன” என்று பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சதீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்றுவிட முடியாது.

கச்சதீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த 800 இற்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கை படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டமைக்கும் 6,184 மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக் கும் 1,175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டமைக்கும் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமான வர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளாா்.