ஒரு மாதத்திற்கு முன்னர் – பின்னோக்கிப் பார்த்தல்

கோவிட்-19 இன் தாக்கத்திற்கு இன்று ஒரு மில்லியன் மக்கள் உட்பட்டுள்ளதுடன், 53,000 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது மார்ச் மாதம் 3 ஆம் நாள் உலக சுகாதார நிறுவனம் விடுத்த செய்திக்குறிப்பை பார்த்தால்:

உலகில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அன்று 90,869 ஆனால் இந்த எண்ணிக்கையின் அளவை நாம் தற்போது சில நாட்களில் எட்டிவிடுகிறோம்.

சீனாவில் தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், 80,000 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அன்று 95 சத விகித இறப்பும் சீனாவில் தான் நிகழ்ந்தது. அதாவது அங்கு 2,946 பேர் அன்று இறந்திருந்தனர். 166 பேர் மட்டுமே சீனாவுக்கு வெளியில் இறந்திருந்தனர்.

ஆனால் இன்று ஒரு நாளில் சராசரியாக 5,000 பேர் மரணமடைகின்றனர்.

மே 3 ஆம் நாள் உலகம் எவ்வாறு இருக்கும்? எத்தனை பேரை இழந்திருப்போம்?