ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி எல்லையில் இருந்து வெளியேறும் சீன இராணுவம்

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியிலிருந்து சீனப் படைகள் விலகும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளிகள் பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியிலும், அந்த ஏரியின் தெற்குக் கரையை ஒட்டியுள்ள கைலாஷ் மலைத்தொடர் பகுதியிலும் எடுக்கப்பட்டவை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தால் மொத்தம் ஐந்து காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.