எஸ்.சிறிதரன் மற்றும் சிவாஜிலிங்கத்திடம் காவல்துறையினர் வாக்குமூலம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் காவல்துறையினர்  வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில், புதுக்குடியிருப்பு  காவல்துறையினரால் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில்,பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறையினரே இன்று  அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையில் உள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்ற காவல்துறையினர், அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.