எழுவர் விடுதலை – ஆளுநருக்கு நிறையும் தந்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக ஆளுநருக்கு தந்திகள் அனுப்பும் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது.

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவும் கலந்து கொண்டார். ஒரு இலட்சம் தந்திகள் அனுப்பும் திட்டம் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை ஏனைய அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி அடங்கலாக 7பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் வழங்கி 9 மாதங்கள் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.