எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்பினரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  நிராகரிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது மக்களை நடுவீதியில் நிர்க்கதியாக விட்ட கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையை இந்த சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்ட இடத்திற்குச் சென்ற சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.