எதிர்வரும் ஞாயிறு அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(22) அன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கை அமுல்ப்படுத்தும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று(19) இரவு 8மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி அவர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சுயஊரடங்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுய ஊரடங்கு நடக்கும் போது வீடுகளில் மட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடவசதியும் வழங்கும்படி மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிகழ்வில் சென்னையில் கோயம்பேடு வணிக வளாகம் உட்பட வணிகர் சங்கங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து செயற்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வை அனைத்து மாநில ஆளுநர்களும் வரவேற்றுள்ளதுடன், தங்களின் ஒத்துழைப்பையும் வழங்கக் காத்திருப்பதாக அறிவித்துள்ளனர்