ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று…

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டு.ஊடக அமையகம்,கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

IMG 0010 ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று...

மட்ட்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

IMG 0019 ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று...

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் கங்காதரன் ஆகியோர் அமரர் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்களினால் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 0029 ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று...

இதன்போது யுத்த காலத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.