உலக நாடுகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுகின்றன

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எணிண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்துக் கூறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சீனாவில் 3,212 பேர் இறந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் அங்கு இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

அதேசமயம், தற்போது பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் வெளியிடும் தகவல்கள் வைத்தியசாலைகளில் இறப்பவர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. வீடுகளில் மற்றும் வயோதிப இல்லங்களில் இடம்பெறும் மரணங்கள் அதில் உள்ளடக்கப்படுவதில்லை என பிரான்ஸின் வைத்தியசாலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரெடெறிக் வலnhக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளது.