உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைமீது ஆளில்லா விமானத் தாக்குதல்

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்மீது மீது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்று (14) வெளியிடப்பட்டுள்ள செய்தியில் அப்கைக் மற்றும் குராய்ஸில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் எரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை .

அரம்கோவின் கூற்றுப்படி, இந்த தாக்குதலுக்குள்ளான இந்த இடமே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலையாகும்.