உயிா்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புதிய ஆதாரங்கள் புறக்கணிப்பு – பேராயர் மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது தொடா்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூலஅறிக்கையை நாம் வரவேற்கின்றோம். இலங்கையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வெளிப்படையான சுயாதீனமான பொறிமுறையின்மை குறித்து நாங்கள் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம்.

இந்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது. தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல விசாரணைகளை முன்னெடுத்தன. ஆனால் இந்த விசாரணைகள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த அனைத்து விவரங்களையும் ஆராயவில்லை. புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வெளிப்படையான சுயாதீன விசாரணைகளிற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள்களையும் மன்றாட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது” என்றும் ஆண்டகை குற்றஞ்சாட்டினாா்.