உந்துருளி விபத்தில் இரண்டு சிப்பாய்கள் பலி

தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மரணமடைந்துள்ளனர்.

பஹமுனா பகுதியில் உள்ள தமனாயாயா பிரதேசத்தில் உந்துருளியில் சென்ற படையினர் பேரூந்து ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியதில் இருவரும் காயமடைந்து சிகிச்சை பலனளிக்காததால் பலியாகியுள்ளனர்.

27 மற்றும் 28 வயதான இரு சிப்பாய்களே பலியானதாகவும், பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.