உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதய வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு தொடர்பில் மோசடி செய்தது உட்பட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று(03) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுது்த போது அவர் நீதிவான் உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.