ஈரானுடன் போரை விரும்பவில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்த போதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலானது எண்ணெய் விலைகளை அதிகரித்து விடுமோ என்று அஞ்சப்படுவதுடன். புதிய மத்திய கிழக்கு சிக்கலை உண்டாக்கிவிடும் என்ற பதற்றமும் நிலவுகின்றது.

ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்தள்ளது. சனிக்கிழமை சவுதி அரம்கோ மீதான தாக்குதல் சேதத்தை உண்டாக்கியதோடு, கச்சா எண்ணெய் விலையையும் கடுமையாக உயரச் செய்தது.

ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட அணுக்கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்துச் செய்து, ஈரான் மீது பல பொருளாதார தடைகளை விதித்தது முதற்கொண்டே, அமெரிக்கா ஈரான் உறவு மோசமான நிலையில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.