இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்

கொரோனாத்தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதி வழியில் மேற்கொண்டனர்.

அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்களே வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

“20 நாள் குழந்தை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்”  என்றார்.

மேலும் பேராசிரியர் மலிக் பெரேரா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கோவிட்-19 பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதன் மூலம் சுகாதார ஆபத்தில்லை என்று கூறியதையும் சில கிறிஸ்தவர்கள் கட்டாயத் தகனங்களை எதிர்ப்பதையும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.