இலங்கையில் இருந்து இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் கடந்த சனிக்கிழமை மாலை பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமாக படகில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 5 பேரும், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர் இருவரும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளார்.