இலங்கைக்கு போவதென்றால் நாங்கள்  தற்கொலை செய்கிறோம்-வியட்நாமிலுள்ள இலங்கை அகதிகள் மன்றாட்டம்

தற்போது வியட்நாமில் உள்ள 300க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம், மாறாக அகதிகளாக மூன்றாவது நாட்டில் குடியமர்த்துமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்திடம் (UNHCR) மன்றாட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் பழுதடைந்த நிலையில், ஆபத்தில் இருந்த பல சிறுவர்கள் உட்பட இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியவர்கள் என சந்தேகிக்கப்படும் 300 பேரை வியட்நாமிய கடலோரக் காவல் படையினர் செவ்வாய்க்கிழமை (8) மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.