இலங்கைக்கான இந்தியத் தூதராக கோபால் பாக்லே நியமனம்

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இதுவரை பணியாற்றி வந்த தரன்ஜித் சிங் சாந் என்பவர் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராக அண்மையில் நியமனம் பெற்றுள்ளதால், இந்த பதவி வெற்றிடமாக இருந்தது.

1992இலிருந்து இந்திய வெளியுறவு சேவைப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய கோபால் பாக்லே இலங்கைக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் துவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகாரப் பிரிவையும் கையாண்டுள்ளார்.