இலங்கை,இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்-செ.கஜேந்திரன்

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு இலங்கை அரசு வழங்குவது தொடர்பாக  கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,

“இந்தியா இலங்கையினுடைய அயல்நாடாக இருக்கின்றது. எங்களை பொறுத்தவரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களிலே மிகுந்த அக்கறை இருக்கின்றது.

இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற விதமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம்.

இலங்கையில் பல இடங்களிலே சீனாவிற்கு இடம்கொடுக்கப்பட்டிருக்கின்ற சூழலிலே இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார்.