இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இப்தார் நோன்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, கிளிநொச்சி நாச்சிக்குடா அல் ஹிக்மா மக்தப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், படைப்பிரிவு உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் வருடம் தோறும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.